மழைநீர் வெளியேற தோண்டப்பட்ட பள்ளத்தால் அண்ணனுாரில் அவதி
ஆவடி: அண்ணனுார், பொன்னியம்மன் கோவில் சாலையில் மழைநீர் வெளியேற தோண்டப்பட்ட பள்ளத்தால், அப்பகுதி மக்கள் நடந்து செல்லவும், வாகனங்கள் இயக்க முடியாமலும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆவடி மாநகராட்சி, அண்ணனுார் பொன்னியம்மன் கோவில் தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள விளையாட்டு மைதானம், சில வாரமாக பெய்து வரும் மழைநீரில் மூழ்கியுள்ளது.
இந்த மைதானத்தை ஒட்டி, அண்ணனுார் ரயில் நிலைய பணிமனை உள்ளது. அங்கிருந்து வெளியேற்றப்படும் மழைநீர் கலந்த கருப்பு நிற கழிவு எண்ணெய், ஒரு மாதமாக மைதானத்தில் தேங்கியுள்ளது.