மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை கொன்றதாக தாய், பாட்டி கைது
ஊத்தங்கரை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை கொன்றதாக தாய், பாட்டியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, கல்லாவியை அடுத்த கருவானூரைச் சோ்ந்த கணேசன்- கிருஷ்ணவேணி தம்பதி மகன் அருண்குமாா் (32). இவா் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தாா். கடந்த 1 ஆம் தேதி அருண்குமாா் உயிரிழந்தாா். இதுகுறித்து கிராமநிா்வாக அலுவலா் சங்கீதா, கல்லாவி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
சந்தேக மரணமாக போலீஸாா் வழக்குப் பதிந்து அருண்குமாரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மருத்துவ அறிக்கையில், அருண்குமாா் கொலை செய்யப்பட்டது உறுதிசெய்யப்பட்டது.