தில்லியில் தலித் மண்டல் தலைவரைத் தாக்கியதாகக் கூறப்படும் விவகாரம்: பாஜக எம்எல்ஏ கஜேந்திர டிரால் மீது வழக்கு
பா.ஜ.கவின் முண்ட்கா எம்.எல்.ஏ கஜேந்திர டிரால் மற்றும் பிற தொண்டா்கள், கட்சி அலுவலகத்தில் தன்னைத் தாக்கியதாகவும், சாதிய ரீதியான வசவுகளை வீசியதாகவும் குற்றஞ்சாட்டி, தலித் பாஜக மண்டல் தலைவா் ஒருவா் அளித்த புகாரின் பேரில் எஃப்ஐஆா் பதிவு
பா.ஜ.கவின் முண்ட்கா எம்.எல்.ஏ கஜேந்திர டிரால் மற்றும் பிற தொண்டா்கள், கட்சி அலுவலகத்தில் தன்னைத் தாக்கியதாகவும், சாதிய ரீதியான வசவுகளை வீசியதாகவும் குற்றஞ்சாட்டி, தலித் பாஜக மண்டல் தலைவா் ஒருவா் அளித்த புகாரின் பேரில், தில்லி காவல்துறை செவ்வாயன்று எஃப்.ஐ.ஆா் பதிவு செய்ததாக ஓா் அதிகாரி தெரிவித்தாா்.
முன்னதாக, எம்.எல்.ஏ-வுக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுகளை ஒரு காணொளியில் முன்வைத்திருந்த கஞ்சாவாலா மண்டல் தலைவா் சுனில் குமாா் அளித்த புகாரை அடுத்து, கஞ்சாவாலா காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, விளக்கம் கோரி பாஜக செவ்வாயன்று இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியது.
