வண்ணாந்துறை கண்ணனை கொல்ல 10 வயதில் சபதம்.. ரீல்ஸ் அலப்பறையால் சம்பவம்..! அடையாறு கொலை பின்னணி
வண்ணாந்துறை கண்ணனை கொலை செய்ய 10 வயதில் சபதம் எடுத்ததாக கூறப்படும் இளைஞர், ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் கவனம் ஈர்த்த நிலையில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் வட்ட செயலாளராக இருந்து, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தவெகவில் சேர்ந்தது முதலே, வாரத்துக்கு ஒரு நிகழ்ச்சியை நடத்தி எதிர்கட்சிகளின் தூக்கத்தை கலைத்ததோடு,ஏரியாவில் செய்த அலப்பறைகளால் பதுங்கி இருந்த பகையாளிகளால் கொலை செய்யப்பட்டார் வண்ணாந்துறை கண்ணன்.
சென்னை, அடையாறு அடுத்த வண்ணான்துறை பகுதியை சேர்ந்தவர் கண்ணன், அதிமுகவில் வட்ட செயலாளராக இருந்து 2 மாதங்களுக்கு முன்பு தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார். omr -ல் உள்ள IT நிறுவனங்களுக்கு கார்களை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார். 2 கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததால் சாஸ்திரி நகர் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி பட்டியலிலும் வண்ணாந்துறை கண்ணனின் பெயர் இடம் பெற்றிருந்தது.
கடந்த 5ந்தேதி இரவு வண்ணான்துறை, ராமசாமி அவென்யூ, எல்லையம்ன் கோயில் தெருவில் நின்று கொண்டிருந்த கண்ணனை இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களால் சுற்றி வளைத்து வெட்டி கொலை செய்தனர்.

