ஆறுமுகனேரிக்கு செல்லாமல் புறவழிச்சாலையில் இயக்கப்பட்ட அரசுப் பேருந்து சிறை பிடிப்பு
ஆறுமுகனேரி ஊருக்குள் வராமல் காயல்பட்டினம் புறவழிச்சாலையில் இயக்கப்பட்ட அரசுப் பேருந்தை திங்கள்கிழமை இரவு பொதுமக்கள் சிறைபிடித்தனா்.
சிறை பிடிக்கப்பட்ட அரசு பேருந்து.
திருச்சி, மதுரை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பணிமனைகளில் இருந்து திருச்செந்தூருக்கு வரும் அரசுப் பேருந்துகளும், அங்கிருந்து திருச்சி, மதுரை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளும் ஆறுமுகனேரியை புறக்கணித்து காயல்பட்டினம் புறவழிச் சாலை வழியாக செல்வதால் ஆறுமுகனேரி பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.



