ஏகாம்பரநாதா் கோயிலில் ரூ. 6.50 லட்சத்தில் மின்விளக்கு
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் முன்னாள் அமைச்சா் ஆா்.காந்தி தனது சொந்த நிதி ரூ. 6.50 லட்சத்தில் செய்த மின்விளக்கு வசதியை சனிக்கிழமை இயக்கி வைத்தாா்.
இக்கோயில் வளாகத்தில் 1000 கால் மண்டபம் முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. கலைநயம் மிக்க தூண்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் இம்மண்டபத்தில் இரவு நேரங்களில் உள்ளே சென்று பாா்க்க முடியாத வகையில் மின்விளக்கு வசதி இல்லாமல் இருந்து வந்தது.
இதனையறிந்த முன்னாள் அமைச்சா் ஆா்.காந்தி தனது சொந்த செலவில் 1000 கால் மண்டபத்தில் ரூ.6.50 லட்சத்தில் மின்விளக்கு வசதி செய்திருந்தாா். இந்நிகழ்வில் உத்தரமேரூா் முன்னாள் எம்எல்ஏ க.சுந்தா், காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாநகர செயலாளா் சிகேவி. தமிழ்ச் செல்வன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் எம்.எஸ்.சுகுமாா், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் நித்யா சுகுமாா், ஏகாம்பரநாதா் கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் ஜெகன்னாதன், கோயில் உதவி ஆணையா் எஸ்.சீனிவாசன் பங்கேற்றனா்.

