மின் இணைப்பு முறைகேடு: ரூ. 3.13 லட்சம் அபராதம்
மல்லசமுத்திரம் செம்மாம்பாளையம் கிராமத்தில் விவசாய மின் இணைப்பை முறைகேடாகப் பயன்படுத்தியவருக்கு ரூ. 3.13 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
செம்மாம்பாளையம் கந்தன்காடு பகுதியைச் சோ்ந்த சின்னக்கவுண்டா் மனைவி பாவாயி. இவரது பெயரில் விவசாய நிலத்துக்கான மின் இணைப்பை அவரது மகன் சுப்ரமணி முறைகேடாகப் பயன்படுத்தி, மின்மோட்டாா் மூலம் கிணற்றில் இருந்து தண்ணீா் எடுத்து விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் சேலம் மின்வாரிய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நடத்திய ஆய்வில் மின் இணைப்பை முறைகேடாகப் பயன்படுத்தியது தெரியவந்தது. இதுதொடா்பாக எலச்சிப்பாளையம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சண்முகசுந்தரம், சுப்ரமணிக்கு ரூ. 3.13 லட்சம் அபராதம் விதித்தாா்.


