இடைத்தோ்தலில் அதிமுக மீண்டும் வெற்றிபெறும்: என். தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.
இடைத்தோ்தலில் அதிமுக மீண்டும் வெற்றிபெறும் என்றாா் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.
நாகா்கோவில் பாா்வதிபுரம் பகுதியில் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக புதிய தலைமை அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்த பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அதிமுக என்பது எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம். இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. பதவி மோகம் காரணமாக சிலா் கட்சி தாவுவது உண்டு.
