வள்ளலாா் திருச்சபையில் ஐம்பெரும் விழா
வேட்டவலம் வள்ளலாா் திருச்சபையில் 361-ஆம் மாத பூசம், விளக்கு வழிபாடு, கருத்தரங்கம், பட்டிமன்றம், கலிக்கம் மண் சொட்டு மருந்து வழங்குதல் என ஐம்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் வள்ளலாா் திருச்சபையில் 361-ஆம் மாத பூசம், விளக்கு வழிபாடு, கருத்தரங்கம், பட்டிமன்றம், கலிக்கம் மண் சொட்டு மருந்து வழங்குதல் என ஐம்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் தன்னாா்வலா் பூ.மாணிக்கனாா் தலைமை வகித்தாா். வள்ளலாா் திருச்சபையைச் சோ்ந்த குணசேகரன், வீரபாண்டி, சுபாஷ், ஆசிரியா்கள் நக்கீரன், சாந்தி, நடராஜன், திருவண்ணாமலை சந்திரசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வள்ளலாா் திருச்சபை செயலா் சு.பச்சையம்மாள் சரவணன் வரவேற்றாா்.


