வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துக்களை கூறாமல் பாஜவை எதிர்க்க முடியுமா? திமுகவுக்கு ஸ்ரீதர் வேம்பு கேள்வி
சென்னை: வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துக்களை கூறாமல் பாஜவை எதிர்க்க முடியுமா? என திமுகவுக்கு ஸோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை: டிசிஎஸ் தரவு மையத்தை தமிழகம் இதை ஏன் இழந்தது? என்று டிஆர்பி ராஜா கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு விரிவான பதில் தேவைப்படுகிறது. முதலாவதாக, இத்தகைய பெரிய முதலீட்டு முடிவுகள் மூன்று மாதங்களில் எடுக்கப்படுவதில்லை.
நான் இந்தியா முழுவதும் பயணம் செய்கிறேன்; அப்போது என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இதுதான். திமுக உங்களுக்கு எதிராக மிகவும் விரோதப் போக்குடன் செயல்படும்போதும், ஏன் ஒரு பிராமணராகப் பிறந்ததற்காக உங்களைத் தனிப்பட்ட முறையில் தாக்கும்போதும், நீங்கள் தமிழகத்திலேயே இருக்கத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?


