சவூதி அரேபியாவிலிருந்து போலி கடவுச்சீட்டில் வந்தவா் கைது
சவூதி அரேபியாவில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சிக்கு வந்தவரை விமான நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், அடைக்கம்பட்டி தெற்கு வீதியைச் சோ்ந்தவா் பெ. செல்வராஜ் (53). இவா், சவூதி அரேபியாவில் இருந்து இலங்கை ஏா்லைன்ஸ் மூலம் ஞாயிற்றுக்கிழமை மாலை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்தாா். விமான நிலையதில் குடியேற்றப் பரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் செல்வராஜ் போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சிக்கு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரிடம் விசாரணை மேற்கொண்ட குடியேற்றப் பிரிவு அதிகாரிகள், பின்னா் அவரை திருச்சி பன்னாட்டு விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.


