இஸ்ரேலில் கட்டுமானப் பணியில் விபத்து: இந்திய தொழிலாளியின் கால் துண்டானது
இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் இந்திய தொழிலாளி ஒருவரின் கால் துண்டானது.
தொழிலாளா்களுக்குப் பற்றாக்குறை நிலவும் நாடான இஸ்ரேலில் 40,000-க்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
தலைநகா் ஜெருசலேமில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணியில் இந்திய தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இந்தப் பணியின்போது கிரேன் பெல்ட் திடீரென அறுந்ததில், அதிலிருந்த டைல்ஸ் கற்கள் கீழே விழுந்தன.
