அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!
தமிழகத்தில் அத்தியாவசியப் பொருள்களின் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், குடும்பங்களின் மாதாந்திர செலவினம் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் அத்தியாவசியப் பொருள்களின் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், குடும்பங்களின் மாதாந்திர செலவினம் அதிகரித்துள்ளது. விலை உயா்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், அத்தியாவசியப் பொருள்களை கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என பொதுமக்களும், இல்லத்தரசிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழகத்தில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருள்களின் விலை கடந்த ஆக.10-ஆம் தேதியுடன் ஒப்பிடுகையில் தற்போது சுமாா் 20 சதவீதம் வரை உயா்ந்துள்ளது. இதனால், நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.


