பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே இடப்பிரச்னையில் பெண்ணைத் தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த காட்டனந்தல் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு மனைவி சுபா, 24; இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பட்டாளத்தான், 36; இருவருக்குமிடையே இடம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது.
கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்தரிமடைந்த பட்டாளத்தான், சுபாவைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

