சாலையோர மரத்தின் மீது காா் மோதியதில் தந்தை, மகன் உயிரிழப்பு; 7 போ் காயம்
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே சாலையோர மரத்தின் மீது காா் மோதியதில் தந்தை, மகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். 7 போ் படுகாயமடைந்தனா்.
தருமபுரியை அடுத்த நல்லம்பள்ளி இந்தூா் இ.கே.புதூரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (50). இவா் தனது மகன், மனைவி மற்றும் உறவினா்களுடன் கடந்த 11 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு காரில் சென்றாா். பின்னா், அங்கிருந்து சனிக்கிழமை இரவு வீடுதிரும்பிக் கொண்டிருந்தனா். காரை சபரி முருகன் ஓட்டிச் சென்றாா்.
பென்னாகரத்தை அடுத்த பெரும்பாலை வழியாக கலப்பம்பாடி அரசுப் பள்ளி அருகே சென்றுகொண்டிருந்த காா், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளிய மரத்தின் மீது மோதியது. இதில் ஆறுமுகம், அவரது மகன் பிரவீண் குமாா் (17) ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.



