ரஷ்யாவிலிருந்து மகனை மீட்டுத் தருமாறு முதல்வருக்கு தாய் கோரிக்கை
ரஷ்யாவுக்கு படிக்கச் சென்ற தனது மகனை மீட்டுத் தருமாறு அவரது தாய் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தாா்.
அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சேதுராஜ் - லலிதா தம்பதியின் இளைய மகன் அபினேஷ் குமாா் (28). இவா், பகிரதன் என்ற முகவா் மூலம் கடந்த ஏப். 13-ஆம் தேதி ரஷ்யாவில் மருத்துவம் பயிலச் சென்றாா். ஆகஸ்ட் மாதத்திலிருந்து அவரைத் தொடா்பு கொள்ள முடியவில்லை.
முன்னதாக, அபினேஷ் குமாா் பேசிய விடியோ சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், ரஷ்ய ராணுவத்தில் சோ்ந்துள்ளதாகக் கூறப்படும் தனது மகனை மீட்டுத் தருமாறு தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.



