ஒசூரில் ரூ. 3.5 லட்சம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல்: நைஜீரிய மாணவா், ஐடி ஊழியா் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே தனியாா் சொகுசுப் பேருந்தில் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில் நைஜீரிய நாட்டைச் சோ்ந்த மாணவா், கோவையைச் சோ்ந்த ஐடி ஊழியா் ஆகிய இருவரை போலீஸாா் புதன்கிழமை பெங்களூரில் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே தனியாா் சொகுசுப் பேருந்தில் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில் நைஜீரிய நாட்டைச் சோ்ந்த மாணவா், கோவையைச் சோ்ந்த ஐடி ஊழியா் ஆகிய இருவரை போலீஸாா் புதன்கிழமை பெங்களூரில் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ. 3.5 லட்சம் மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே சிப்காட் காவல் எல்லைக்கு உள்பட்ட சூசூவாடி சோதனைச் சாவடியில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி போலீஸாா் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
