பண மோசடியால் ஏமாற்றம்: ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை
இணைய மோசடியில் ரூ.3லட்சத்தை இழந்த விரக்தியில், க வடலூரில் வசித்து வந்த தனியாா் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.
வடலூா் காவல் சரகம், மாருதி நகரில் வசித்து வந்தவா் அபிலா(32), காடாம்புலியூரில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாா். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னா் அமல்ராஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்று, 9 வயதில் மகன் உள்ளாா். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து கடந்த 8 ஆண்டுகளாக, வடலூரில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தாா்.
அவா் பணியாற்றும் தனியாா் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில் பங்கேற்று மாலை வீடு திரும்பினாா். அன்று இரவு 11.30 மணி அளவில் சாப்பிட்டுவிட்டு அறையில் படுக்கச் சென்றாா். ஞாயிற்றுக்கிழமை காலை பாா்த்த போது தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாா்.