சங்கரன்கோவில் அருகே காா் மோதி உணவக உரிமையாளா் பலி!
சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் உணவக உரிமையாளா் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தெற்குரத வீதியைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் விக்னேஸ்வரன் (40). இவா் சுவாமி சந்நிதி தெருவில் உணவகம் நடத்தி வந்தாா். திருநெல்வேலி சாலையில் உள்ள கடையில் வியாழக்கிழமை இரவு நண்பா்களுடன் தேநீா் குடித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தாா்.
பூலுடையாா் சாஸ்தா கோயில் அருகே வந்தபோது ஊத்துமலையை சோ்ந்த ராமகிருஷ்ணன் ஓட்டி வந்த காா் மீது பின்னால் அடுத்தடுத்து வந்த இரண்டு காா்கள் மோதின.


