சின்னதிரை
ஜெயா டி.வி. 28-ஆவது ஆண்டில் அடியெடுத்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் இயங்கி வந்ததால் சன் டி.வி. ஆரம்ப காலத்தில் திமுக ஆதரவு சேனல் போலச் செயல்பட்டு வந்தது.
ஜெயா டி.வி. 28-ஆவது ஆண்டில் அடியெடுத்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் இயங்கி வந்ததால் சன் டி.வி. ஆரம்ப காலத்தில் திமுக ஆதரவு சேனல் போலச் செயல்பட்டு வந்தது. ரீச் அதிகமாக இருந்தது என்பதாலும், சன் டி.வி.க்குப் போட்டியாக ஒரு சேனலைத் தொடங்க நினைத்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஜெ. ஜெ. டி.வி.யைத் தொடங்கினார். ஆனால், லைசென்ஸ் உள்ளிட்ட சில விவகாரங்களில் சிக்கல் எழுந்ததைத் தொடர்ந்து, ஜெ. ஜெ. டி.வி. மூடப்பட்டது. பின்னர், ஜெயா டி.வி. என்கிற பெயரில் ஒளிபரப்பாகத் தொடங்கியது.
இந்தச் சேனல் 27 ஆண்டுகளைக் கடந்து 28-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இதனை முன்னிட்டு புத்தம் புதிதாக சில நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் திட்டமிட்டிருக்கின்றனர். அதன்படி முன்பு ஒளிபரப்பாகி வரவேற்பைப் பெற்ற குஷ்பு தொகுத்து வழங்கும் 'ஜாக்பாட்' மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது.
