திரைக்கதிர்
பாலிவுட்டின் பிரபல இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் எந்த விஷயம் குறித்தும் வெளிப்படையாகப் பேசுவதற்குத் தயங்காதவர். திரையுலகில் நிலவும் அழுத்தங்கள் குறித்தும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு முன்னாள் பாலிவுட் உலகம் எதிர்க்கொள்ளும் சிக்கல் குறித்தும் அடிக்கடி பேசி வருகிறார்.
இவர் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கூறும்போது, 'அதிகாரத்தில் இருப்பவர்களுடன் திரைத்துறையினர் வளைந்துகொடுக்கும் சமரசங்களே ஹிந்தித் திரையுலகின் தற்போதைய நிலைக்கு முக்கியக் காரணம்.
அதேவேளையில், தென்னிந்தியத் திரையுலகம் இதுபோன்ற அழுத்தங்களுக்கு அவ்வளவு எளிதில் பலியாவதில்லை. தென்னிந்தியத் திரைத்துறை தனது வலுவான கலாசார அடையாளத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதே இதற்கு முக்கியக் காரணம். தென்னிந்தியத் திரைத்துறையானது பாலிவுட்டை சார்ந்திருக்காத வரை, அது தன் தனித்துவமான தன்மையை எப்போதும் இழக்காது' என்றார்.
