திரிபுராவில் ரூ. 40 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்; லாரி ஓட்டுநர் கைது
திரிபுராவில் ரூ. 40 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் தொடர்பாக...
புது தில்லி: அகர்தலாவுக்கு கடத்துவதற்காக லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ.40 கோடி மதிப்பிலான 50 கிலோ போதைப்பொருளை போலீசார் புதன்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடர்பாக லாரி ஓட்டுநரை கைது செய்தனர்.
அசாமிலிருந்து போதைப்பொருள்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரதசிய தகவல் கிடைத்தது.



