மலைக் கிராமத்துக்கு புதிய வழித்தட பேருந்து! மக்கள் அளவற்ற மகிழ்ச்சி!!
மலைக் கிராமத்துக்கு புதிய வழித்தட பேருந்து இயக்கப்பட்டதால் மக்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் மலை கிராமத்திற்கு செல்லும் புதிய வழித்தட பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார். கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா கணியம்பாடி அடுத்த தெள்ளை கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

