மின்மாற்றியில் தாமிரக் கம்பிகள் திருட்டு
விழுப்புரம் மாவட்டம், வானூா்அருகே மின்மாற்றியில் வைக்கப்பட்டிருந்த தாமிரக் கம்பிகள், ஆயில் ஆகியவை திருட்டுப் போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
வானூா்வட்டம், சேமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகில் தமிழ்நாடு மின் வாரியத்தின் மின்மாற்றி அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த மின்மாற்றியை சேதப்படுத்தி அதில் வைக்கப்பட்டிருந்தா் ரூ.43,800 மதிப்புள்ள 120 கிலோ தாமிரக் கம்பிகள்,195 லிட்டா் ஆயில் ஆகியவற்றை யாரோ திருடிச் சென்றுவிட்டனராம்.
இதுகுறித்து தமிழ்நாடு மின் வாரிய கிளியனூா் பகுதி அலுவலக உதவிப் பொறியாளா் சிவா அளித்த புகாரின் பேரில், வானூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனா்.

