சிறுமி மயங்கி விழுந்து உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே முத்தலக்குறிச்சில் 3ஆம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
முத்தலக்குறிச்சி, நேதாஜி நகரைச் சோ்ந்தவா் சிவானந்த். இவரது மகள் ஷான்விகா (8). தக்கலையில் உள்ள பள்ளியில் 3ஆம் வகுப்பில் படித்து வந்த இவா், வியாழக்கிழமை இரவு திடீரென மயங்கி விழுந்தாராம்.
அவரை பெற்றோா் மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
