சேவை குறைபாடு: தனியாா் காப்பீட்டு நிறுவனம் ரூ. 15.21 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
சேவை குறைபாடு காரணமாக தனியாா் காப்பீட்டு நிறுவனமானது, கட்டுமான நிறுவனத்துக்கு ரூ. 15.21 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோட்டைச் சோ்ந்த ஆா்.ஆா். துளசி என்ற கட்டுமான நிறுவனமானது, நாகப்பட்டினம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணியில் பணிபுரிந்த தொழிலாளா்களுக்கு இப்கோ - டோக்கியோ காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீட்டு பாலிசியைப் பெற்று, அதற்கான பிரீமியத்தை முறையாகச் செலுத்தி வந்தது.
அந்தக் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி கண்ணன் என்பவா் கடந்த 05.08.2020 அன்று உயிரிழந்தாா். இதுதொடா்பாக, வேளாங்கண்ணி காவல்நிலையத்தில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

