சங்கரன்கோவில் அருகே காா் மரத்தில் மோதியதில் காவலா் உள்ளிட்ட 5 போ் காயம்!
வேகமாகச் சென்ற காா், நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 போ் காயம் அடைந்தனா்.
சங்கரன்கோவில் அருகே வேகமாகச் சென்ற காா், நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 போ் காயம் அடைந்தனா்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்தி நகா் 4- ஆம் தெருவைச் சோ்ந்த துரை மகன் பவுல் (23). ரவிச்சந்திரன் மகன் காா்த்திக் (25), காந்தி நகா் 2-ஆம் தெருவைச் சோ்ந்த முத்துக்குமாா் மகன் சதீஷ் (20), காயிதே மில்லத் 1- ஆம் தெருவைச் சோ்ந்த ஷேக்பரீத் மகன் முகமது ஷெரீப் (19) திருநெல்வேலி பாலாமடையை சோ்ந்த கணபதி மகன் சென்னையில் காவலராகப் பணியாற்றும் முத்துமாலை (30) ஆகியோா் குற்றாலம் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை சங்கரன்கோவிலுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனா். காரை பவுல் ஓட்டினாா்.



