முதல்முறையாக திருட முயன்று சிக்கி... போலீசிடம் அதிர்ச்சிகர காரணம் கூறிய சாப்ட்வேர் என்ஜினீயர்
சென்னைமுதல்முறையாக திருட முயன்று சிக்கிய சாப்ட்வேர் என்ஜினீயர் போலீசிடம் அதிர்ச்சி அளிக்கும் காரணம் ஒன்றை கூறியுள்ளார்.சென்னை திருவான்மியூர், கெனால் சாலை பகுதிய
முதல்முறையாக திருட முயன்று சிக்கிய சாப்ட்வேர் என்ஜினீயர் போலீசிடம் அதிர்ச்சி அளிக்கும் காரணம் ஒன்றை கூறியுள்ளார்.
சென்னை திருவான்மியூர், கெனால் சாலை பகுதியில் வசிப்பவர் மங்கள்சந்த் (வயது 63). இவர், சென்னை இந்திராநகர் 17-வது குறுக்குத்தெருவில் நகை அடகு கடையை நடத்தி வருகிறார். கடந்த 11-ந்தேதி இவரது கடைக்கு அருகில் வசிப்பவர்கள், அதிர்ச்சி தகவல் ஒன்றை செல்போன் மூலம் பேசி தெரிவித்தனர். அடகு கடையின் பூட்டை, மர்மநபர் ஒருவர் உடைத்து கொண்டிருப்பதாக அந்த தகவலில் கூறினார்கள்.
உடனடியாக மங்கள்சந்த், தனது கடைக்கு ஓடிவந்தார். அக்கம் பக்கத்து பொதுமக்களையும் உதவிக்கு அழைத்தார். அனைவரும் அங்கு கூடினார்கள். கூட்டத்தை பார்த்ததும், அடகு கடையின் பூட்டை உடைத்துக்கொண்டிருந்த மர்ம நபர் தப்பி ஓடினார். அவரை மடக்கி பிடித்து திருவான்மியூர் போலீசில் ஒப்படைத்தனர்.

