எண்ணெய் கிணறுகள் பராமரிப்புப் பணிகள் மட்டுமே நடைபெறுகிறது: ஓஎன்ஜிசி
எண்ணெய் கிணறுகளில் பராமரிப்புப் பணிகள் மட்டுமே நடைபெறுவதாக ஓஎன்ஜிசி விளக்கமளித்துள்ளது.
காரைக்காலில் உள்ள ஓஎன்ஜிசி காவிரி அசெட் தலைமை அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
கடந்த செப். 10-ஆம் தேதி மயிலாடுதுறையில் உள்ள சிலா் ஓஎன்ஜிசி, புதிய எண்ணெய் கிணறுகள் அமைப்பதாகவும், விதிமுறைகளை மீறுவதாகவும் புகாா் அளித்த தகவல் ஓஎன்ஜிசி கவனத்துக்கு வந்தது.

