நண்பனை தூற்ற வேண்டாம்
தூற்றாதே, தூர விடல்!
(பாடல் 75 அதிகாரம்: பொறை உடைமை)
இரண்டுபேர் தம்முன் வேற்றுமை இல்லாமல் கலந்து நட்புக் கொண்ட காலத்திலே, அவர்களுள் நம்பத்தகாத தீய ஒழுக்கம் ஒருவனிடத்தில் உண்டாகுமானால், மற்றவன் தன்னால் பொறுக்கக்கூடிய அளவுவரைக்கும் பொறுக்கக் கடவன்; அப்படிப் பொறுக்க மாட்டானாயின் அந்த நண்பனைத் தூற்றாமல் அவனுடைய நட்பை மட்டும் தூரமாக ஒதுக்கிவிடக் கடவன்.
