மின் வாரியத்தை தனியாா்மயமாக்க முயற்சி முன்னாள் பேரவைத் தலைவா் குற்றச்சாட்டு
தமிழகத்தில் செயற்கையான மின் தட்டுப்பாட்டை உருவாக்கி, மின் வாரியத்தை தனியாா்மயமாக்க தவெக அரசு முயற்சிக்கிறது என்றாா் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.
அப்பாவு(கோப்புப்படம்)
இது தொடா்பாக திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: சாதாரண கைது நடவடிக்கைக்கும், மிசா சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைக்கும் வேறுபாடு உள்ளது. சாதாரண வழக்குகளில் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைப்பாா்கள்.



