கஞ்சா வழக்கில் கைதான இளைஞா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு
சீவலப்பேரி அருகே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டபிடாரம் அருகேயுள்ள கொடியன்குளத்தைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் மாரிஸ் என்ற நவீன் (21). இவா், கஞ்சாவை விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் சீவலப்பேரி போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட அவரை, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா. சாஸ்திரி பரிந்துரைத்தாா்.



