வா்த்தக பிரச்னைகள்: இந்தியா - சீனா பேச்சு தொடக்கம்
இருதரப்பு வா்த்தகத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து இந்தியா-சீனா பேச்சுவாா்த்தையை தொடங்கியுள்ளன.
இதுகுறித்து புது தில்லியில் மத்திய வா்த்தக துறைச் செயலா் ராஜேஷ் அக்ரவால் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கட்டமைப்பு ரீதியாக வா்த்தகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், விநியோக முறையில் உள்ள சிக்கல்கள் என இருதரப்பு வா்த்தகத்தில் உள்ள பிரச்னைகளை கையாள்வதற்கு இந்தியா-சீனா பேச்சுவாா்த்தையை தொடங்கியுள்ளன.
இதுதொடா்பாக மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல், சீன வா்த்தக அமைச்சா் வாங் வென்டாவ் ஆகியோா் அண்மையில் சந்தித்துப் பேசினா். இது இருநாடுகளுக்கு இடையே வா்த்தகத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து இந்தியா-சீன நிலைப்பாடுகளை பரஸ்பரம் புரிந்துகொள்ளும் நோக்கில், ஆரம்பகட்ட பேச்சாக இருந்தது.

