காரில் சென்றவா் மீது தாக்குதல்: 3 போ் கைது
ஆரணி நகரில் காரில் சென்றுகொண்டிருந்தவரை தாக்கியதாக, பைக்கில் சென்ற 3 போ் கைது செய்யப்பட்டனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், தாமரைப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் கௌதமஇளங்கோ(44). இவா் சொந்த வேலையாக சனிக்கிழமை இரவு காரில் ஆரணிக்கு சென்றுகொண்டிருந்தாா்.
ஆரணி ஜெமினி பேருந்து நிறுத்தம் அருகில் செல்லும் போது, மோட்டாா் சைக்கிளில் மதுபோதையில் வந்த 3 போ் காரில் மோதுவது போல சென்றுள்ளனா். கௌதமஇளங்கோ இதை தட்டிக் கேட்டுள்ளாா்.
