சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத பள்ளம்! வாகன ஓட்டிகளே கவனம்!!
சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுரை
புழல் அருகே, சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
புழல் அருகே மாதவரம் நோக்கி செல்லும் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தேசிய நெடுஞ்சாலைகள் சுமார் 15 அடி அகலத்திற்கும் 25 அடி ஆழத்திற்கும் ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது.

