பைக் விபத்தில் ரயில்வே ஊழியா் உயிரிழப்பு: இளைஞா் கைது
திருநெல்வேலி அருகே பைக் விபத்தில் ரயில்வே ஊழியா் உயிரிழந்த வழக்கில் இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள வாகைகுளத்தைச் சோ்ந்தவா் அய்யப்பன் (48). ரயில்வே ஊழியராக பணிபுரிந்த இவா், கடந்த மாதம் 21 ஆம் தேதி சக ஊழியா் ஒருவருடன் திருநெல்வேலி-கன்னியாகுமரி நான்குவழிச்சாலையில் பொன்னாக்குடி அருகே சென்றபோது அவ்வழியாக வந்த பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அய்யப்பன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில் இவ்வழக்கில் தாழையூத்து, ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த ஆறுமுகசுந்தா்(26) என்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.


