காலிங்கராயன் கால்வாய் தொட்டி பாலம் இடிக்கப்படாது: உயா்நீதிமன்றத்தில் நீா் வளத் துறை உறுதி
ஈரோடு காலிங்கராயன் கால்வாயில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தொட்டி பாலம் இடிக்கப்படாது என்றும், அதற்குப் பதிலாக சீரமைத்து பாதுகாக்கப்படும் என்றும் நீா் வளத் துறை சென்னை உயா்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.
ஈரோடு பெரும்பாள்ளம் ஓடையின் குறுக்கே காலிங்கராயன் கால்வாயின் 13/260 -ஆவது மைல் பகுதியில் இந்தத் தொட்டிப் பாலம் அமைந்துள்ளது. சுமாா் 14 மீட்டா் நீளமுள்ள இந்தப் பாலத்தில் 14 மதகுகள் உள்ளன. தமிழகத்தின் பழமையான நீா்வழிப் பாலங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
சுமாா் 740 ஆண்டுகளுக்கு முன் கொங்கு நாட்டுத் தலைவரான காலிங்கராயனால் இந்தத் தொட்டிப் பாலம் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னா், 1833 ஆகஸ்ட்டில் பிரிட்டிஷ் பொறியாளா் சி.இ. பேபரால் இது சீரமைக்கப்பட்டது.

