சுரண்டை அருகே இரு தரப்பினரிடையே மோதல்: 6 போ் கைது
தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே இரு தரப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இது தொடா்பாக, 6 போ் கைது செய்யப்பட்டனா்.
சுரண்டை அருகே உள்ள இரட்டைகுளம் கிராமத்துக்கும், சுரண்டை நகருக்கும் இடையே உள்ள குளத்தின் அருகே இளைஞா்கள் தினமும் இரவு அமா்ந்து மது குடிப்பாா்களாம்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல் 10-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் குளத்தின் அருகே மது அருந்தியுள்ளனா். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் இரட்டைகுளம், புலியடி மாடன் கோயில் தெருவைச் சோ்ந்த த. முத்துக்குட்டி (53), அதே ஊரைச் சோ்ந்த சேகா் ஆகியோா் வந்துள்ளனா்.
