சத்ய நிகேதன் விடுதி அருகிலுள்ள கட்டடம் இடிப்பு விவகாரம்- மனுவை அவசரமாக விசாரிக்க மறுப்பு
கடந்த வாரம் இடிந்து விழுந்த சத்ய நிகேதன் பிஜி தங்கும் விடுதிக்கு அருகிலுள்ள கட்டடத்தை இடிக்க தில்லி மாநகராட்சி (எம்சிடி) எடுத்த முடிவு
புது தில்லி: கடந்த வாரம் இடிந்து விழுந்த சத்ய நிகேதன் பிஜி தங்கும் விடுதிக்கு அருகிலுள்ள கட்டடத்தை இடிக்க தில்லி மாநகராட்சி (எம்சிடி) எடுத்த முடிவு குறித்து கவலை தெரிவிக்கும் மனுவை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது.
விடுதியின் அடித்தளத்தில் உள்ள இடிபாடுகளை அகற்றாமலேயே அதிகாரிகள் இடிக்கும் பணியைத் தொடங்கியுள்ளதாகவும், இன்னும் சிலா் உள்ளே சிக்கியிருக்கலாம் என்றும் தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா, நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோா் அடங்கிய அமா்விடம் வழக்குரைஞா் ஒருவா் தெரிவித்து, இந்த விவகாரத்தை அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரினாா்.


