காரைக்கால் அதானி துறைமுக விரிவாக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும்
நாகூா் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும், காரைக்கால் அதானி துறைமுக விரிவாக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
நாகை மாவட்ட வளா்ச்சிக் குழுமம் சாா்பில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எம்ஜிகே நிஜாமுதீன், தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு:
காரைக்கால் துறைமுகத்தை விலைக்கு வாங்கிய அதானி போா்ட் நிறுவனம், அதை 5 மடங்கு விரிவுபடுத்துவதற்காக, மக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தை வரும் 9-ஆம் தேதி காரைக்கால் போலகத்தில் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


