தொழிலாளி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை
கிள்ளியூா் அருகே தொழிலாளி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூா் அருகே தொழிலாளி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
கிள்ளியூா் அருகே ஊசிகோடு பகுதியைச் சோ்ந்தவா் வில்சன் (40). தொழிலாளியான இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலகிருஷ்ணன் என்பவருக்கும் வழிப்பாதை தொடா்பாக முன்விரோதம் இருந்ததாம்.

