தென்னை நார் கயிறு தொழில் ஊசல்! : கரம் கொடுக்குமா தமிழக அரசு
பொள்ளாச்சி: கயிறு தொழில் மேம்படுத்த கொள்முதல் நிலையம் அமைத்தல் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கயிறு உற்பத்தியாளர் நலச்சங்கத்தினர் அரசுக்கு வலியுறுத்தி உள்ளனர். பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. தென்னை நார் மற்றும் கயிறு உற்பத்தி உள்ளிட்ட தொழில்கள் நடைபெறுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் கயிறுகள், கேரளாவுக்கு அனுப்பப்பட்டு, அங்கு இருந்து, 'மேட்' தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக, கயிறுக்கு கட்டுபடியான விலை கிடைக்காததால் தொழில் பாதித்தது. இத்தொழிலை மேம்படுத்த தேவையான வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என, கயிறு உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கயிறு உற்பத்தியாளர் நலச்சங்க செயலாளர் மகேந்திரன், பொருளாளர் கொற்றைவேல் ஆகியோர் கூறியதாவது:

