பட்டா கத்திகளுடன் மோதல்: 2 பேர் கைது
வடமதுரை, செப்.9- பெரியக்கோட்டை பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த கட்டட தொழிலாளி கோபால் 35, வீரேந்திரன் 22, இடையே
பெரியக்கோட்டை பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த கட்டட தொழிலாளி கோபால் 35, வீரேந்திரன் 22, இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
இருவரும் பட்டாக் கத்தியை எடுத்து ஒருவரை ஒருவர் மிரட்டினர். வீரேந்திரன் தரப்பினர் தாக்கியதில் கோபால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். புகாரில் இருதரப்பையும் சேர்ந்த சேகர், கருப்புசாமி, கோபால் உள்ளிட்ட 5 பேர் மீது வடமதுரை எஸ்.ஐ., பாண்டியன் வழக்குப் பதிந்தார். இவர்களுள் பிரசாந்த் 33, கோபால் கைதாகினர்.
