இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) புவி கண்காணிப்பு செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டதற்கு புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
புதுவை முதல்வர் ரங்கசாமி. - (கோப்புப் படம்)
அவா் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் திறன் நாளுக்கு நாள் புதிய உச்சங்களை எட்டி வருவதற்கு இந்த மகத்தான வெற்றி மேலும் ஒரு சிறந்த சான்றாக விளங்குகிறது.

