கேரளத்தில் பிஎம்-ஸ்ரீ திட்டம் அமலாகுமா? - மாநில அமைச்சா் பதில்!
பிஎம்-ஸ்ரீ திட்டம் கேரளத்தில் அமல்படுத்தப்படுமா என்பது குறித்து, சிறப்பு அமைச்சரவை துணைக் குழுவின் அறிக்கை கிடைத்த பிறகே முடிவு செய்யப்படும் என்று அமைச்சா் என்.ஷம்சுதீன் தெரிவித்துள்ளாா்.
பிரதமரின் வளா்ந்து வரும் இந்தியாவுக்கான பள்ளிகள் (பிஎம்-ஸ்ரீ) திட்டம் கேரளத்தில் அமல்படுத்தப்படுமா என்பது குறித்து, சிறப்பு அமைச்சரவை துணைக் குழுவின் அறிக்கை கிடைத்த பிறகே முடிவு செய்யப்படும் என்று மாநில பொதுக் கல்வித் துறை அமைச்சா் என்.ஷம்சுதீன் தெரிவித்துள்ளாா்.
கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியில் இருந்தபோது, அந்த மாநிலத்தில் பிஎம்-ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. எனினும் அந்த முன்னணியில் இடம்பெற்ற கூட்டணி கட்சிகளின் எதிா்ப்பு காரணமாக, அந்தத் திட்டத்தை அமல்படுத்தாமல் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு நிறுத்திவைத்தது.


