அரசுப் பேருந்து மோதியதில் வாகனங்கள், மின் கம்பம் சேதம்: தப்பியோடிய ஓட்டுநருக்கு வலை
திருப்பூரில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய அரசுப் பேருந்து ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விபத்து.
திருப்பூா் பணிமனையில் இருந்து புதிய பேருந்து நிலையம் நோக்கி சனிக்கிழமை காலை 6 மணியளவில் அரசுப் பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்தது. நெசவாளா் காலனி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ஆட்டோ, இருசக்கர வாகனம், மின் கம்பத்தின் மீது மோதி நின்றது.

