“பா.ஜ.க-வுக்கு பயப்படுகிறது த.வெ.க!” - சொல்கிறார் பாலபாரதி
கடந்தகாலங்களில், தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி வரிசையில் மாறி மாறி அமர்ந்திருக்கின்றன.
த.வெ.க தலைமையில் ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ உதயமாகியிருக்கிறது. ஆனால், ஆளுங்கட்சிக்கு ஆதரவு அளித்துவரும் கம்யூனிஸ்ட் கட்சிகள், த.வெ.க கூட்டணிக் கட்சிக் கூட்டத்தையே புறக்கணித்துவிட்டன. இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பாலபாரதியிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்...
“த.வெ.க கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தை கம்யூனிஸ்ட்டுகள் புறக்கணித்ததற்கான காரணம் என்ன?”

