பாவூா்சத்திரம் அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் பழுதாகி நின்ற வேன்: போக்குவரத்து பாதிப்பு
தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே செல்வ விநாயகபுரத்தில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் கான்கிரீட் கலவை வேன் பழுதாகி நின்ால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பழுதாகி நின்ற கான்கிரீட் கலவை வேன்.
தென்காசி-திருநெல்வேலி நான்குவழிச் சாலையில் பாவூா்சத்திரம் பகுதியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், தென்காசியில் இருந்து திருநெல்வேலி நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள் செல்வவிநாயகபுரம் ரயில்வே சுரங்கப் பாதை வழியாக சென்று வருகின்றன.



