"நடிப்பைக் கைவிட நினைத்த என்னை அவர்தான் சமாதானப்படுத்தினார்" - நினைவுகளைப் பகிர்ந்த நடிகை சமந்தா
உடல் நலப்பிரச்னையால் நடிப்பைக் கைவிட நினைத்த என்னை கணவர்தான் சமாதானப்படுத்தி நடிப்பைத் தொடர செய்தார் என்று நடிகை சமந்தா ருத்ரபிரபு தெரிவித்தார்.
நடிகை சமந்தா ருத்ரபிரபு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவைத் திருமணம் செய்து விவாகரத்து செய்துவிட்டார். தற்போது அவர் இயக்குநர் ராஜ் நிடிமோரு என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கர்ப்பமாக இருக்கும் அவர் தனது இரண்டாவது திருமணத்திற்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு ஒரு ஆண்டு சமந்தா நடிக்காமல் இருந்தார்.
இந்தக் காலக்கட்டத்தில் அவர் தனது நடிப்பைக் கைவிடவும் ஆலோசித்துள்ளார். இது குறித்து சமந்தா அண்மையில் நடைபெற்ற உரையாடல் ஒன்றில், அந்தக்காலக்கட்டத்தைத் தான் எப்படிக் கடந்து வந்தேன் என்பதைப் பற்றி சமந்தா பகிர்ந்துகொண்டார்.


