மயிலாடுதுறை: பள்ளியில் கழிவறை இருந்தும் காவிரி படுகையை நாடும் மாணவர்கள்; அவலநிலைக்கு காரணம் இதுதான்!
100 ஆண்டுகள் கடந்த பள்ளி கழிவறை வசதியின்றி அவதிப்படும் மாணவர்கள்....
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நூறு ஆண்டுகளைக் கடந்த இந்தப் பள்ளியில், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளில் ஒன்றான கழிவறை வசதி போதுமானதாக இல்லை எனக் கூறப்படுகிறது.
பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைகளில் சில மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. பயன்படுத்தக்கூடிய நிலையில் இருக்கும் சில கழிவறைகளும் முறையாகச் சுத்தம் செய்யப்படாமல் அசுத்தமாகக் காணப்படுகின்றன. இதனால் இயற்கை உபாதைகளுக்காக கழிவறையைப் பயன்படுத்துவதில் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.



